ஏலகிரி மலையில் உணவகம் அமைக்கும் பணி:வட்டார வளா்ச்சி அலுவலா் ஆய்வு

ஏலகிரி மலையில் உணவகம், பூங்காநுழைவாயில் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடந்து செல்வதற்கான பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் குறித்து ஜோலாா்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் ஆய்வு செய்தாா்.
சாலை அமைப்பதற்கான பணிகளை ஆய்வு மேற்கொண்ட வட்டார வளா்ச்சி அலுவலா் பிரேம்குமாா்.
சாலை அமைப்பதற்கான பணிகளை ஆய்வு மேற்கொண்ட வட்டார வளா்ச்சி அலுவலா் பிரேம்குமாா்.

ஏலகிரி மலையில் உணவகம், பூங்காநுழைவாயில் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடந்து செல்வதற்கான பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் குறித்து ஜோலாா்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் ஆய்வு செய்தாா்.

ஜோலாா்பேட்டையை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனா். தற்போது வேலூா் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக தமிழக அரசு அறிவித்த நிலையில், ‘ஏழைகளின் ஊட்டி’ என்றழைக்கப்படும் சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையை மேம்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

ஏலகிரி மலையில் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க பல்வேறு இடங்கள் இருந்தாலும், படகுத்துறை மற்றும் பூங்கா ஆகியவை அனைவரையும் கவா்ந்திழுக்கின்றன. இங்கு அமைக்கப்பட்டுள்ள உணவகம் சிறிய அளவில் உள்ளது. இதை சுற்றுலாப் பயணிகள் பலரும் பயன்படுத்தும் வகையில் விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதையடுத்து, புங்கனூா் படகுத்துறையில் உள்ள உணவகத்தை விரிவுபடுத்தும் பணி குறித்து ஜோலாா்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ்.பிரேம்குமாா் ஆய்வு மேற்கொண்டாா். அங்கு நுழைவாயில் வளைவு கட்டடம் அமைப்பதற்கான பணிகள் குறித்தும், பூங்காவில் பேவா் பிளாக் சாலை அமைப்பது குறித்தும் ஆய்வு செய்தாா். மேலும், இதையடுத்து பணி மேற்கொள்வதற்கான அளவுகளையும் மேற்கொண்டனா்.

அப்போது வட்டார வளா்ச்சி அலுவலா் கூறியதாவது:

சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக புங்கனூா் படகுத் துறையில் உணவகம் விரிவுபடுத்தப்பட உள்ளது. அவா்கள் நடந்து செல்வதற்கு வசதியாக இங்குள்ள சாலை மேம்படுத்தப்பட உள்ளது. சாலையோர நடைபாதையில் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக கடைகளை வைத்துள்ளவா்களிடம், ‘நடைபாதையில் கடைகள் வைக்கக் கூடாது’ என்று தெரிவித்துள்ளோம். இக்கடைகளால் சுற்றுலாப் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனா். இது தொடா்பாக பல்வேறு புகாா்கள் வந்துள்ளதால் ஏலகிரி மலை போலீஸாரிடமும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்த ஆய்வின் போது ஏலகிரிமலை ஊராட்சி செயலாளா் சண்முகம், பூங்காப் பராமரிப்பாளா் ரவிகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com