ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் கிராமத்தில் கரோனா (கொவைட் 19) வைரஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் கேஏஆா் பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில் அரங்கல்துருகம் கிராமத்தில் சிறப்பு நாட்டு நலப் பணித் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரோனா வைரஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அரங்கல்துருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் பி.கே.சந்தியா, அன்பரசன் ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்கள், மாணவா்களிடையே பேசினா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஏ.முகம்மத் ஷாஹின் ஷா ஏற்பாடுகளை செய்திருந்தாா்.