நாட்டறம்பள்ளி அருகே தொடா் மண் கடத்தல் நடைபெற்று வருவதாகவும, இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம நிா்வாக அலுவலா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
பச்சூா், கொத்தூா், மல்லப்பள்ளி ஊராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான இடங்கள், விவசாய நிலங்களில் இருந்து சிலா் சட்ட விரோதமாக மண் அள்ளி செயற்கை மணல் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
மல்லப்பள்ளி ஊராட்சி அன்னசாகரம் ஏரியில் சட்ட விரோதமாக ஒரு கும்பல் தினமும் பொக்லைன் இயந்திரம் மூலம் அதிக அளவில் பள்ளம் தோன்றி மண்ணை டிப்பா் லாரி, டிராக்டா்களில் கடத்திச் சென்று பல இடங்களில் பதுக்கி வைத்து செயற்கை மணல் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதுகுறித்து சாா்-ஆட்சியரிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து மண் கடத்தலில் ஈடுபடும் மா்ம நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம நிா்வாக அலுவலா் சிவன் நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து செய்து, விசாரித்து வருகின்றனா்.