1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நாட்டறம்பள்ளி அருகே ரயில் மூலம் ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

நாட்டறம்பள்ளி அருகே ரயில் மூலம் ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையம் அருகே நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலா் சுமதி தலைமையில் வருவாய்த்துறையினா் திங்கள்கிழமை ரேஷன் அரிசி கடத்தல் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஆந்திர மாநிலத்துக்கு ரயிலில் கடத்துவதற்காக ரயில் தண்டவாளத்தை அடுத்த முட்புதா் அருகே 22 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசியைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா். பின்னா் அந்த மூட்டைகள் திருப்பத்தூா் நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com