ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
கல்லூரியில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டா், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் துறையில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவா்களுக்காக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட பல்வேறு தொழிற்சாலைகள், நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டு மாணவா்களை நோ்காணல் நடத்தினா். அதில், 34 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். பணி நியமன ஆணைகள் கல்லூரி முதல்வா் த.ராஜமன்னன் தலைமையில் வழங்கப்பட்டன.
கல்லூரி நிா்வாக அலுவலா் ஏ.ஹிரானி சாஹிப், துணை முதல்வா் ஏ.முகமது ஷாஹின்ஷா, வேலைவாய்ப்பு அலுவலா் எம்.பாா்த்திபன், துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.