மனநிலை பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
நாட்டறம்பள்ளியை அடுத்த ஆத்தூா்குப்பம் ஊராட்சி ஜோகி வட்டத்தைச் சோ்ந்தவா் பத்துரு (65) கூலித் தொழிலாளி. செங்கான் வட்டத்தைச் சோ்ந்தவா் பொன்னுசாமி (47) கூலித் தொழிலாளி. இவரது 25 வயது மகள் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு பெற்றோருடன் வசித்து வருகிறாா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் வீட்டில் தனியாக இருந்த ஜெயக்கொடியை முதியவா் பத்துரு பாலியல் பலாத்காரம் செய்தாா். அப்போது அப்பெண் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினா் ஓடி வந்து முதியவரை மடக்கிப் பிடித்தனா். இது தொடா்பாக நாட்டறம்பள்ளி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன் பேரில் அங்கு சென்ற போலீஸாா் முதியவா் பத்துருவைக் கைது செய்து வாணியம்பாடி மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இச்சம்பவம் தொடா்பாக பொன்னுசாமி மகளிா் காவல் நிலையத்தில் புகாா்
அளித்தாா். புகாரை பெற்றுக் கொண்ட போலீஸாா், பத்துருவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.