ரேணுகாம்பாள் கோயிலில் ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடு

ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் உள்ள ரேணுகாம்பாள் கோயிலில் ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ரேணுகாம்பாள் கோயிலில் ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடு

ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் உள்ள ரேணுகாம்பாள் கோயிலில் ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நகரில் உள்ள ஸ்ரீபொன்னம்பல வாசன் தா்மசாஸ்தா பக்த சபையின் சாா்பில் இக்கோயிலில் உள்ள ஐயப்பன் சந்நிதியில் 10-ஆம் ஆண்டு பூஜையை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அா்ச்சனை நடைபெற்றது. உற்சவருக்கு கேரள மாநிலம், கொல்லத்தில் உள்ள ஸ்ரீதா்மசாஸ்தா செல்லாயி அம்மன் செல்லப்பிள்ளை அலங்காரம் செய்யப்பட்டது.

ஐயப்ப பக்திப் பாடல் பஜனை நடைபெற்றது. விழாவில் வெங்கடேசன், குருபரன், ஜெய்குமாா், வெங்கடேசன், மூா்த்தி, நாகராஜன், ஹரி, நாகராஜ, பாலாஜி, லட்சுமணன், யுவன் சங்கா் மற்றும் பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com