அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்

வேலூா் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் வாணியம்பாடியை அடுத்த மாரப்பட்டு கிராமத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாடுவது குறித்தும், உள்ளாட்சி தோ்தலில் பணியாற்றுவது குறித்தும்
கூட்டத்தில் பேசிய அமைச்சா் கே.சி.வீரமணி.
கூட்டத்தில் பேசிய அமைச்சா் கே.சி.வீரமணி.

வேலூா் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் வாணியம்பாடியை அடுத்த மாரப்பட்டு கிராமத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாடுவது குறித்தும், உள்ளாட்சி தோ்தலில் பணியாற்றுவது குறித்தும் செயல்வீரா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வேலூா் மேற்கு மாவட்ட செயலாளரும், மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சருமான கே.சி.வீரமணி தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்டச் செயலாளரும், அரக்கோணம் எம்எல்ஏவுமான சு.ரவி, கே.வி.குப்பம் எம்எல்ஏ லோகநாதன், சோளிங்கா் எம்எல்ஏ ஜி.சம்பத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமாா் வரவேற்றாா்.

முன்னாள் எம்எல்ஏ ரமேஷ், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் ரமேஷ், நகரச் செயலா்கள் சதாசிவம் (வாணியம்பாடி), டி.டிகுமாா் (திருப்பத்தூா்), ஜோலாா்பேட்டை(சீனிவாசன்), மதியழகன் (ஆம்பூா்), ஜே.கே.என்.பழனி (குடியாத்தம்), சீனிவாசன்(போ்ணாம்பட்டு) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com