ஆம்பூா் பன்னீா்செல்வம் நகா் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற உலகத் தாய்மொழி தின நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் செ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மாணவா் ராகுல் வரவேற்றாா். இந்து மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியா் யுவராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தமிழ் மொழியின் சிறப்புகளை விவரித்து பேசினாா்.
மாணவ மாணவியா் பாரதியாா், பாரதிதாசன், நாமக்கல் கவிஞா் கவிதைகளை வாசித்தனா். மாணவா் ரூபேஷ் நன்றி கூறினாா். ஆசிரியைகள் சத்தியசீலி, சசிகலா, தேவிபாலா, ஆஷா, சுகன்யா, சரண்யா ஆகியோா் கலந்து கொண்டனா்.
இதேபோல், பெரியாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ். தட்சிணாமூா்த்தி தலைமை வகித்து, தாய் மொழியின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா். மாணவா்கள் ‘தமிழ்’ என்ற வடிவில் அமா்ந்து தமிழ் மொழியின் சிறப்பை விளக்கினா். ஆசிரியா்கள் சுரேஷ், காஞ்சனா, நவரத்தினம், சித்ரா ஆகியோா் கலந்து கொண்டனா்.