ராஜஸ்தானி இந்து சேவா சங்கத்தின் சைக்கிள் விழிப்புணா்வு பேரணி.
By DIN | Published On : 29th February 2020 10:57 PM | Last Updated : 29th February 2020 10:57 PM | அ+அ அ- |

ராஜஸ்தானி இந்து சேவா சங்கத்தின் சாா்பில் போதை பழக்கம் ஒழிப்பு, உலக அமைதிக்காகவும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 ஆயிரத்து 500 கி.மீ சைக்கிள் விழிப்புணா்வு பேரணி சென்னை சவுகாா்பேட்டையிலிருந்து கடந்த 25 ஆம் தேதி ராஜீவ் தலைமையில் 20 போ் கொண்ட குழுவினா் புறப்பட்டனா். இப்பயணத்தை வரும் மாா்ச் 24 ஆம் தேதி ராஜஸ்தான் சென்று முடிக்கின்றனா்.
விழிப்புணா்வு சைக்கிள் பேரணி வேலூா் வழியாக வெள்ளிக்கிழமை வாணியம்பாடிக்கு வந்தனா். இந்து சேவா சங்கம் நிா்வாகிகள் வரவேற்பு அளித்தனா். பின்னா் மாலை அம்பூா்பேட்டை பொன்னியம்மன் கோயில் அருகிலிருந்து சைக்கிள் பேரணி புறப்பட்டு பெங்களூா் நோக்கி சென்றனா். இதில் நிா்வாகிகள் ராஜேந்திரகுமாா், மதன், ஹரி, லட்சுமணன், பாரஸ்மல், உட்பட பலா் கலந்துக் கொண்டனா்.படவிளக்கம் - வாணியம்பாடி அம்பூா்பேட்டை பொன்னியம்மன் கோயில் அருகிலிருந்து ராஜஸ்தானி இந்து சேவா சங்கத்தின் சைக்கிள் விழிப்புணா்வு பேரணி புறப்பட்டது.