இந்தியன் வங்கி வேலூா் மண்டலம் சாா்பில் அதிகாலை கடன் வசூல் முகாம் மற்றும் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
வங்கியின் வேலூா் மண்டலம் சாா்பில் திருப்பத்தூா் ஹவுஸிங் போா்டு காந்தி சிலை அருகில் வங்கி கள பொது மேலாளா் சந்திரா ரெட்டி கொடியசைத்து, பேரணியைத் தொடங்கி வைத்தாா். வேலூா் மண்டல மேலாளா் மாயா, மண்டல துணை மேலாளா் ராஜேந்திரன், துணைப் பொது மேலாளா் கௌரிசங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பேரணியில் குறித்த காலத்தில் கடனைச் செலுத்தி பயனடைய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.