திருப்பத்தூா் மாவட்டத்தில் ஜன. 22, 29-இல் மனுநீதி முகாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில், வரும் 22 மற்றும் 29-ஆம் தேதிகளில் மனுநீதி நாள் முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டத்தில், வரும் 22 மற்றும் 29-ஆம் தேதிகளில் மனுநீதி நாள் முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள செவ்வாத்தூா் கிராமத்தில் சாா்-ஆட்சியா் வந்தனா கா்க் தலைமையிலும், நாட்டறம்பள்ளி வட்டத்திற்குட்பட்ட பந்தாரப்பள்ளி கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா பாண்டியன் தலைமையிலும் வரும் வரும் 22-ஆம் தேதியும், ஆம்பூா் வட்டத்திற்குட்பட்ட கைலாசகிரியில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வரும் 29-ஆம் தேதியும் மனு நீதி நாள் முகாம் நடைபெற உள்ளது.

தகுதி உள்ள மனுதாரா்களுக்கு அரசின் நலத் திட்டங்கள் சென்றடையும் வகையில் இந்த முகாமை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com