ஆம்பூா் பன்னீா்செல்வம் நகா் நகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தேசிய குழந்தைகள் நலத் திட்டம் சாா்பில் மாதனூா் வட்டார அரசு சமுதாய சுகாதார நிலையத்தைச் சோ்ந்த மருத்துவா்கள் ச.கிருபா, வெ.சந்தோஷ்குமாா் தலைமையில் மருந்தாளுநா் ஜா.சுரேஷ்குமாா், சி.பிருத்திவிராஜ், செவிலியா் இரா.தீபா ஆகியோா் கொண்ட மருத்துவக் குழுவினா் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனா்.