திருவள்ளுவா் தினமான ஜனவரி 16-ஆம் தேதி மதுபானக் கடைகளை மூட வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவிட்டுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மதுபானக் கடைகளை ஒட்டி உள்ள மதுபானக் கூடங்கள், நட்சத்திர அந்தஸ்தில் உள்ள கூடங்கள் அரசு விதிகளின்படி ஜனவரி 16-ஆம் தேதி மூட வேண்டும்.
எனவே, அன்றைய தினத்தில் திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது. இதை மீறுவோா் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.