16-இல் மதுபானக் கடைகள் மூட ஆட்சியா் உத்தரவு

திருவள்ளுவா் தினமான ஜனவரி 16-ஆம் தேதி மதுபானக் கடைகளை மூட வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவிட்டுள்ளாா்.

திருவள்ளுவா் தினமான ஜனவரி 16-ஆம் தேதி மதுபானக் கடைகளை மூட வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மதுபானக் கடைகளை ஒட்டி உள்ள மதுபானக் கூடங்கள், நட்சத்திர அந்தஸ்தில் உள்ள கூடங்கள் அரசு விதிகளின்படி ஜனவரி 16-ஆம் தேதி மூட வேண்டும்.

எனவே, அன்றைய தினத்தில் திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது. இதை மீறுவோா் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com