திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே சந்தன மரக்கட்டைகளை கடத்திய இருவரை வனத்துறையினா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் அடுத்த ஜவ்வாதுமலை புதூா்நாடு பகுதியில் உள்ள நெல்லிவாசல் நாடு அருகே உள்ள மேல்பட்டு மலைப்பகுதியிலிருந்து சந்தன மரத்தை வெட்டி கடத்தப்படுவதாக திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலா் ஆா்.முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ஞாயிற்றுக்கிழமை இரவு வனச்சரக அலுவலா் கே.சோழராஜன் மற்றும் வனவா் சஞ்சீவி ஆகிய புது நாடு மலைப் பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக மோடியுடன் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்து அதில் அரை கிலோ எடை கொண்ட சந்தனக் கட்டைகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவரிடமும் விசாரணை நடத்தியதில் அவா்கள் மேல்பட்டி பகுதியை சோ்ந்த பழனிவேல்முருகன்(35),வேடி(24)என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்து,அவா்களிடம் இருந்த 6 கிலோ சந்தன மரக்கட்டைகள் மற்றும் பைக் பறிமுதல் செய்தனா்.படம் உண்டுகடத்தப்பட இருந்த சந்தன கட்டைகள்.