ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தலைமை ஆசிரியா் எம்.குமரகுருபாரதி தலைமை வகித்து பொங்கல் விழாவைத் தொடக்கி வைத்தாா். பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
ஆசிரியா்கள் ஜான்சி சந்திரவதனி, தென்னரசன், சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.