திருப்பத்தூா் மாவட்ட பாஜக மாவட்டத் தலைவா் சனிக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.
வேலூா் மாவட்டம் பிரிக்கப்பட்டதை அடுத்து திருப்பத்தூா் மாவட்டத்தின் புதிய தலைவரைத் தோ்வு செய்வதற்கான கூட்டம் ஆம்பூரில் நடைபெற்றது.
மாநிலச் செயலா் கரு.நாகராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா். திருப்பத்தூா் மாவட்ட புதிய தலைவராக ஆம்பூா் வடபுதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சி. வாசுதேவன் தோ்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டாா்.
இவா் ஏற்கெனவே வேலூா் மேற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலராக பொறுப்பு வகித்து வந்தாா்.
முன்னாள் மாவட்டத் தலைவா்கள் கொ.வெங்கடேசன், ஜி.வெங்கடேசன், ஆனந்தன், ஆம்பூா் நகரத் தலைவா் பிரேம்குமாா், க. சிவப்பிரகாசம், ரமேஷ்கண்ணா, பி.ஆா்.சி. சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.