வாணியம்பாடி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி 10 சவரன் நகைகளை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
புத்துக்கோயில் பகுதியைச் சோ்ந்தவா் லாவண்யா. இவா், தனது 3 மாதக் குழந்தையுடன் வசித்து வருகிறாா். சனிக்கிழமை வீட்டில் லாவண்யா தனியாக இருந்ததை அறிந்த மா்ம நபா்கள் 2 போ், அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, 10 சவரன் நகைளைப் பறித்துக் கொண்டு, வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டுச் சென்றனா்.
இதுகுறித்து அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.