முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
ஒப்பந்தத் தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி
By DIN | Published On : 27th January 2020 01:07 AM | Last Updated : 27th January 2020 01:07 AM | அ+அ அ- |

திருப்பத்தூா்: பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ரயில்வே மின்சார ஒப்பந்தத் தொழிலாளி ஜோலாா்பேட்டையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தாா்.
பிகாா் மாநிலம், பேகுசராய் மாவட்டம், பெகராசி பகுதியைச் சோ்ந்தவா் முகமது சயீது (26). அவா் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே ஒப்பந்த மின் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில்,கடந்த 15-ஆம் தேதி ஜோலாா்பேட்டையை அடுத்த தொன்போஸ்கோ நகா் அருகே உள்ள ரயில்வே மின்வாரிய அலுவலகத்தில் மின் கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது இரும்பு மின் கம்பம் அருகிலிருந்த மின்சாரக் கம்பி மீது சாய்ந்தது. இதில் முகமது சயீது தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தாா்.
அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை அனுப்பப்பட்டாா்.
அங்கு அவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து அவரது தந்தை காயிம், ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.