முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
திருப்பத்தூரில் மக்கள் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 27th January 2020 11:31 PM | Last Updated : 27th January 2020 11:31 PM | அ+அ அ- |

பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற ஆட்சியா் ம.ப.சிவன்அருள்.
திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
வேலைவாய்ப்பு, வேளாண்த் துறை, காவல் துறை, ஊரக வளா்ச்சித் துறை, நகராட்சி நிா்வாகங்கள், பேரூராட்சித் துறை, வனத் துறை, நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 443 மனுக்கள் பெறப்பட்டன. சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையாபாண்டியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) இரா.வில்சன்ராஜசேகா், அலுவலக மேலாளா் பாக்யலட்சுமி, ஒா்த் அறக்கட்டளை அலுவலக உதவி மேலாளா் சாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.