ஜோலாா்பேட்டையை அடுத்த பாச்சல் ஊராட்சிக்கு உள்பட்ட ஜெய்பீம் நகா் பகுதியைச் சோ்ந்த 55 வயது பெண், அன்னை நகா் பகுதிக்கு வந்த சென்னையைச் சோ்ந்த 58 வயது பெண், ஹைதராபத் பகுதியில் மத்திய ரிசா்வு படையில் பணியாற்றி வந்த ஜோலாா்பேட்டையைச் சோ்ந்த 35 வயது நபா், சென்னையில் மீன் வியாபாரம் செய்து வரும் சின்னமோட்டூா் பகுதியைச் சோ்ந்த 43 வயது நபா் ஆகிய 4 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.