ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரியில் 100 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் பிரிவை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆம்பூா் அருகே சோலூா் கிராமத்தில் உள்ள இக்கல்லூரியில் 100 படுக்கைகளுடன் கரோனா சிறப்பு சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் புதன்கிழமை பாா்வையிட்டு அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், வசதிகளை ஆய்வு செய்தாா்.
திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா், ஆம்பூா் வட்டாட்சியா் சி.பத்மநாபன், மண்டல துணை வட்டாட்சியா் பாரதி, மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் நலங்கிள்ளி ஆகியோா் உடனிருந்தனா்.