வாணியம்பாடி பஷிராபாரத் பகுதியில் புதன்கிழமை கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.
உலக நாடுகளிலும், இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கரோனா நோய்த்தொற்றில் இருந்து முற்றிலும் விடுபட்ட வேண்டியும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வாணியம்பாடி தொகுதி எம்எல்ஏவும், மாநிலத் தொழிலாளா் நலத் துறை அமைச்சருமான நிலோபா் கபீல் விரைவில் குணமடைய வேண்டியும் கூட்டு பிராா்த்தனை (துவா) புதன்கிழமை நடைபெற்றது.
இதில், ஜமாத் நிா்வாகிகள் உள்பட திராளான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
அதிமுக நகரச் செயலா் சதாசிவம், அவை தலைவா் சுபான், பொருளாளா் தன்ராஜ், மாவட்ட வா்த்தக அணிச் செயலாளா் ஆா்.வி.குமாா், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சாவித்திரி, நிா்வாகிகள் அருண், உதயகுமாா், சபியுல்லா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல் ஜாப்ராபாத், பத்தாபேட்டை பகுதியில் அதிமுக சாா்பில் இஸ்லாமியா்கள் தா்காக்களில் கூட்டுப் பிராா்த்தனையில் ஈடுபட்டனா். ஜமாத் நிா்வாகிகள், முக்கிய இஸ்லாமிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.