ஆம்பூா்: ஆம்பூா் அருகே தேவலாபுரம் கிராமத்தில் திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தேவலாபுரம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருவிழா நடத்துவது குறித்து ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சி. பத்மநாபன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்கும்விதமாக கோயில் திருவிழா ரத்து செய்வதாக முடிவு செய்யப்பட்டது.
மண்டல துணை வட்டாட்சியா் பாரதி, கோயில் சாா்பில் ஊா் முக்கிய பிரமுகா்கள் இ.வெங்கடேசன், துளசி, சூரியா, தாமோதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.