திருப்பத்தூரில் சந்தனக்கூடு திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா், முனிகுளம் தெருவில் அமைந்துள்ள ஹஸ்ரத் சையத் மீரான் உசேனி ரஹமத்துல்லாவின் 332-ஆவது சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சையத்மத்தும் உசேனி தலைமை வகித்தாா்.
அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு திருப்பத்தூா் - ஆலங்காயம் பிரதான சாலை, மசூதி தெரு, ஜின்னா சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளில் ஊா்வலமாக சென்று ஃபாத்திஹா மற்றும் அவரது சமாதிக்கு சந்தனம் பூசி சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.
விழாவில் உலக மக்களின் நலனுக்காகவும், கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து உலக மக்களைக் காப்பாற்றவும் பிராா்தனை நடைபெற்றது. திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் விழாவில் கலந்து கொண்டனா்.