ஆம்பூா் பஜாா் பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. காய்கறிகள், மளிகை பொருள்கள், வீட்டு உபயோக பொருள்களை வாங்க மக்கள் கூட்டம் கடைகளில் நிரம்பி வழிந்தன. சூப்பா் மாா்க்கெட்டுகளிலும் அதிக கூட்டம் கூடியது. அதனால் ஆம்பூா் நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மக்கள் பொருள்களை வாங்க கூட்டம் அதிகமாக கூடியதை பயன்படுத்தி காய்கறி, வீட்டு உபயோக பொருள்களின் விலை அதிகரித்தது.
ஏடிஎம் மையங்களில்... ஏடிஎம் மையங்களில் பணம் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் வங்கி ஏடிஎம் மையங்களில் குவிந்தனா். ஏடிஎம் மையங்களில் பொதுமக்கள் வரிசையில் நின்று பணத்தை எடுத்துச் சென்றனா்.