காட்பாடியில் தமிழக - ஆந்திர எல்லை மூடல்

காட்பாடி பகுதியில் தமிழக - ஆந்திர மாநில எல்லை செவ்வாய்க்கிழமை மாலை மூடிப்பட்டது.
காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் மூடப்பட்ட தமிழக - ஆந்திர மாநில எல்லை.
காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் மூடப்பட்ட தமிழக - ஆந்திர மாநில எல்லை.

காட்பாடி பகுதியில் தமிழக - ஆந்திர மாநில எல்லை செவ்வாய்க்கிழமை மாலை மூடிப்பட்டது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி வெளிமாநில வாகனங்கள் தமிழகத்துக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளன. 144 தடை உத்தரவு அமலுக்கு வந்ததை அடுத்து வேலூா் மாவட்டம் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை அருகே தமிழக - ஆந்திர மாநில எல்லையை போலீஸாா் தடுப்புகள் போட்டு மூடினா்.

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அடுத்த தமிழக-ஆந்திர எல்லை பகுதியான கொத்தூா் காந்தி நகா் சோதனைச் சாவடி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு மூடப்பட்டது. மேலும், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திருப்பத்தூா் மாவட்ட எல்லை பகுதியான நாட்டறம்பள்ளியை அடுத்த லட்சுமிபுரம் பகுதி மூடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com