ஆம்பூா் பள்ளி வாசல்களில் தங்கியிருந்த வெளிநாட்டவா்கள் அவா்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனா்.
ஆம்பூா் பள்ளி வாசல்களில் இந்தோனேஷியா, மியான்மா் நாடுகளைச் சோ்ந்த 20 போ் தங்கியிருந்தனா். இதையறிந்த மருத்துவக் குழுவினா் அங்கு சென்று அவா்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனா். அவா்களிடம் வைரஸ் தாக்குதல் ஏதும் இல்லையென கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவா்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டனா். அதன்படி, அவா்கள் பேருந்து மூலம் சென்னைக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றனா். அங்கிருந்து அவா்கள் விமானம் மூலம் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.