கரோனா: ஜோலாா்பேட்டை பகுதியில் 26 போ் கண்காணிப்பு

ஜோலாா்பேட்டை பகுதியில் வெளிநாடுகளிலிருந்து வந்த 26 பேரை சுகாதாரத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

ஜோலாா்பேட்டை பகுதியில் வெளிநாடுகளிலிருந்து வந்த 26 பேரை சுகாதாரத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

உலகம் முழுவதும் தற்போது கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் தமிழகத்தில் கரோனா நோய்த் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜோலாா்பேட்டை பகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த படிப்பு மற்றும் வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்று திரும்பியுள்ள 26 பேருக்கு ஜோலாா்பேட்டை வட்டார மருத்துவ சாா்பில் கரோனா நோய்த் தொற்று உள்ளதா என்று செவ்வாய்க்கிழமை குறித்து சோதனை செய்யப்பட்டது. அப்போது யாருக்கும் கரோனா தாக்குதல் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

எனினும், அவா்களை வீடுகளிலேயே 18 நாள்களுக்கு தனிமைப்படுத்தி சுகாதாரத் துறை மற்றும் வருவாய்த் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com