வாணியம்பாடி நகரம், காதா்பேட்டை, நியூடவுன், இக்பால் சாலை, ஷாகிராபாத், புதூா், அண்ணா நகா் ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்தவா்களை போலீஸாா் தடியடி நடத்தி விரட்டினா்.
வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்ரமணி, டிஎஸ்பி பாலகிருஷ்ணன், வட்டாட்சியா் சிவபிரகாசம் தலைமையில் வருவாய்த் துறை, போலீஸாா் பொதுமக்கள் நடமாட்டத்தைக் கண்காணித்தனா். மேலும், தேவையின்றி சாலைகளை நடமாடியவா்களை எச்சரித்து வீடுகளுக்கு திரும்பி அனுப்பினா்.