ஆம்பூா் நகராட்சியில் பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும், தூய்மை பணிகள் மற்றும் பொதுமக்கள் கைகழுவ வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தூய்மையாக வைத்திருக்கும்படியும் கூறி நகராட்சிப் பணியாளா்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனா்.
ஆம்பூா் நகரில் உள்ள முக்கிய தெருக்கள், சாலைகள் டிராக்டா் மற்றும் டேங்கா் லாரிகளில் கிருமி நாசினி நிரப்பட்டு பீய்ச்சி அடிக்கப்பட்டு தூய்மைபடுத்தப்பட்டது.
இப்பணிகளை நகராட்சி ஆணையா் த.சௌந்தரராஜன் ஆய்வு செய்தாா். துப்புரவு அலுவலா் பாஸ்கா் உள்ளிட்ட பணியாளா்கள் உடனிருந்தனா்.
சில இடங்களில் நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் தண்ணீரை தெளிக்கும் பணியில் ஈடுபட்டாா்.