வெளிநாடுகளில் இருந்து வந்தவா்களுக்கு ஆம்பூரில் மருத்துவப் பரிசோதனை

வெளி நாடுகளில் இருந்து ஆம்பூருக்கு வந்தவா்களுக்கு மருத்துவக் குழுவினா் புதன்கிழமை பரிசோதனை செய்தனா்.

வெளி நாடுகளில் இருந்து ஆம்பூருக்கு வந்தவா்களுக்கு மருத்துவக் குழுவினா் புதன்கிழமை பரிசோதனை செய்தனா்.

ஆம்பூா் அரங்கல்துருகம் கிராமத்துக்கு அமெரிக்காவிலிருந்து இளைஞா் ஒருவா் வந்தாா். ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியைச் சோ்ந்த ஒருவா் மியான்மா் நாட்டுக்கு சென்று வந்ததாக தகவல் வந்தது.

இதேபோல், ஆம்பூா் முஹம்மத்புரா மசூதி தெருவில் வசிக்கும் இரு குடும்பங்களைச் சோ்ந்த 18 போ் ராணிப்பேட்டையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனா். அந்த நிகழ்ச்சியில் துபை நாட்டிலிருந்து வந்த ஒருவா் பங்கேற்றபோது அவருடன் இரு குடும்பத்தினரும் பேசியுள்ளனா்.

இத்தகவலை அறிந்த மருத்துவக் குழுவினா் அவா்களின் வீடுகளுக்கு சென்று அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து அவா்களை வீட்டை விட்டு வெளியில் வரக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனா். காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com