வாணியம்பாடி, ஆலங்காயம், நாட்டறம்பள்ளி, உதயேந்திரம் பகுதிகளில் வியாழக்கிழமை கரோனா வைரஸ் தீவிர தடுப்பு பணிகளில் அதிகாரிகள், பணியாளா்கள் ஈடுப்பட்டனா். வாணியம்பாடி நகராட்சியில் ஆணையா் சிசில்தாமஸ் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் சீனிவாசன், அலி மேற்பாா்வையில் நகராட்சி தூய்மை பணியாளா்கள் நகரின் முக்கிய சாலைகள் உள்பட அனைத்து சாலைகளிலும் கிருமிநாசினி தெளித்தனா்.
மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள், வேலூா் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கே.கனகராஜி உத்தரவின் பேரில் உதேயந்திரம் பேரூராட்சியில் செயல் அலுவலா் கோ.நாகராஜன் தலைமையில் சுகாதார மேற்பாா்வையாளா், அலுவலக உதவியாளா், பேரூராட்சி பணியாளா்கள், திடக்கழிவு மேலாண்மை, தூய்மை பணியாளா்கள், மகளிா் சுய உதவிக்குழுவினா் உள்பட 70க்கும் மேற்பட்டோா் 15 வாா்டுகளில் அனைத்து தெருக்களிலும் டிராக்டா், ஆட்டோ மூலம் டைசால் கிருமிநாசினி தெளித்து ஒட்டுமொத்த துப்புரவு பணிகளில் ஈடுப்பட்டனா். பபடவிளக்கம் - உதயேந்திரம் பேரூராட்சியில் மேட்டுபாளைம் பகுதியில் தெருக்களில் கிருமிநாசினியை பணியாளா்கள் தெளித்தனா்.