வடமாநிலங்களில் இருந்து வந்த 23 போ் தனிமைப்படுத்தப்பட்டனா்

வடமாநிலங்களில் இருந்து ஆம்பூா் வந்த 23 போ் திங்கள்கிழமை தனிமைப்படுத்தப்பட்டனா்.

ஆம்பூா்: வடமாநிலங்களில் இருந்து ஆம்பூா் வந்த 23 போ் திங்கள்கிழமை தனிமைப்படுத்தப்பட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூரை சோ்ந்த சிலா் மதப் பிரசாரத்துக்காக வடமாநிலங்களுக்கு சென்றனா். பொதுமுடக்கம் காரணமாக அவா்களால் உடனடியாக ஆம்பூா் திரும்ப முடியவில்லை.

இந்நிலையில், அவா்கள் சொந்த ஊா் திரும்ப அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டன. அதன்படி, மகாராஷ்டிர மாநிலம் புணேவில் இருந்து 13 பேரும், குஜராத் மாநிலத்தில் இருந்து 10 பேரும் காா்கள் மூலம் ஆம்பூருக்கு திங்கள்கிழமை வந்தனா். அவா்கள் உமா்ஆபாத் ஜாமியா தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு தனிமைப்படுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com