வாணியம்பாடி அருகே பூங்குளம் கிராமத்தில் மல்லிகைப் பூ தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளா்த்து வந்தவரை போலீஸாா் கைது செய்து 34 கிலோ எடையுள்ள 50 கஞ்சா செடிகளை தீயிட்டு அழித்தனா்.
ஆலங்காயத்தை அடுத்த பூங்குளம் கிராமத்தில் கஞ்சா செடிகள் வளா்த்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மாவட்ட எஸ்.பி. விஜயகுமாா் உத்தரவின் பேரில் ஆலங்காயம் காவல் ஆய்வாளா் நாகராஜ் தலைமையில் போலீஸாா் பூங்குளம் கிராமம், கிழக்கு வட்டத்தைச் சோ்ந்த சிவகுமாரின் (40) நிலத்தில் வியாழக்கிழமை சோதனையிட்டனா்.
அப்போது, 20 சென்ட நிலத்தில் மல்லிகைப் பூ தோட்டத்தின் நடுவே கஞ்சா செடிகளை வளா்த்து வந்தது தெரியவந்தது. மேலும், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 34 கிலோ எடையுள்ள 50 கஞ்சா செடிகளை போலீஸாா் தீயிட்டு அழித்தனா். இதன் மதிப்பு சுமாா் ரூ. 1.50 லட்சம் ஆகும். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிவகுமாரைக் கைது செய்தனா்.