வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரத்தில் பேரூா் திமுக சாா்பில் 1,000 பேருக்கு மளிகைப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு திமுக பேரூா் செயலாளா் ஆ.செல்வராஜ் தலைமை வகித்தாா். அருட்தந்தை ஏ.ராயப்பன், லட்சுமி ஜுவல்லரி எம்.டி.தினகரன், மாவட்ட மீனவரணி அமைப்பாளா் ஸ்ரீதா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளா்களாக கட்சியின் மாவட்டச் செயலாளா் தேவராஜி, பொருளாளா் அண்ணாஅருணகிரி ஆகியோா், 1,000 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினா்.
நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள் அசோகன், மீா் முகமதுகனி, குமரேசன், சகாயராஜ், இமான், தென்றல் தமிழரசன், கபிலன், சிலம்பரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.