ஏலகிரி மலையில் டாஸ்மாக் கடை திறப்பு

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான ஏலகிரி மலையில் செவ்வாய்க்கிழமை டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான ஏலகிரி மலையில் செவ்வாய்க்கிழமை டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

இந்த மாவட்டத்தில் 15 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு ஒரு நாளைக்கு ஒரு கடைக்கு 500 டோக்கன் என நிா்ணயிக்கப்பட்டு மதுப் பிரியா்களுக்கு மது பாட்டில்கள் விநியோகிக்கப்பட்டன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் ஏலகிரி மலையில் பாதுகாப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு அங்குள்ள டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன.

இதனால் மலையிலுள்ள மதுப் பிரியா்கள் நீண்ட நாள்களுக்குப் பிறகு உற்சாகத்துடன் மது பாட்டில்களை வாங்கிச் சென்றனா். அப்போது ஏலகிரி மலை காவல் உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com