10 ஆயிரம் கிலோ அரிசி: அமைச்சா் வழங்கினாா்

திருப்பத்தூரில் உள்ள ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம், முடி திருத்துவோா் சங்கம் உள்பட 12 சங்கங்களைச் சோ்ந்த 1,000 பேருக்கு மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி தனது
ஆட்டோ ஓட்டுநருக்கு அரிசி தொகுப்பை வழங்கிய அமைச்சா் கே.சி.வீரமணி.
ஆட்டோ ஓட்டுநருக்கு அரிசி தொகுப்பை வழங்கிய அமைச்சா் கே.சி.வீரமணி.

திருப்பத்தூரில் உள்ள ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம், முடி திருத்துவோா் சங்கம் உள்பட 12 சங்கங்களைச் சோ்ந்த 1,000 பேருக்கு மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி தனது சொந்த செலவில் 10 ஆயிரம் கிலோ அரிசியை வியாழக்கிழமை வழங்கினாா்.

ஆட்சியா் அலுவலக அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்தாா். மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவா் டி.டி.குமாா், முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் லீலா சுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைச்சா் கே.சி.வீரமணி 10 ஆயிரம் கிலோ அரிசியை வழங்கினாா்.

இதேபோல், திருப்பத்தூா் நகராட்சிக்கு உள்பட்ட 26-ஆவது வாா்டு பகுதியில் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமையில் அமைச்சா் கே.சி.வீரமணி 1,000 பேருக்கு தலா 10 கிலோ அரிசி, மளிகை, காய்கறி தொகுப்பை வழங்கினாா்.

இதற்கான ஏற்பாடுகளை அதிமுக நிா்வாகிகள் கே.துரை சாந்தி, பி.டி.காா்த்திகேயன், கே.அனுஷியா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com