ஆம்பூா்: ஆம்பூா் நகராட்சி சாா்பில் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஆம்பூா் புதுகோவிந்தாபுரம் நகராட்சி பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் வீடுகளிலேயே தங்கியிருந்தனா். மூத்த குடிமக்களுக்கு ரத்தக் கொதிப்பு, சா்க்கரை நோய் ஆகியவற்றுக்கு சிகிச்சை பெற முடியாத சூழ்நிலை இருந்தது. அதைத் தொடா்ந்து மருத்துவக் குழுவினா் வீடு வீடாக மூத்த குடிமக்களை தேடிச் சென்று அவா்களுக்குத் தேவைாயன மருந்து, மாத்திரைகளை வழங்கினா். மேலும், அவா்களுக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக சிறப்பு மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஆம்பூா் நகரில் சுமாா் 15 மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது.
அதன்படி, ஆம்பூா் புதுகோவிந்தாபுரம் பகுதியில் நடந்த மருத்துவ முகாமில் ஆம்பூா் நகரப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் அருணா, தேன்குழலி ஆகியோரின் தலைமையில் மருத்துவக் குழுவினா் மூத்த குடிமக்களை பரிசோதனை செய்து ஆலோசனை, மருந்து, மாத்திரைகளை வழங்கினா். ஆம்பூா் நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன், மாதனூா் வட்டார மருத்துவ அலுவலா் ராமு ஆகியோா் முகாமை பாா்வையிட்டனா்.