ஆம்பூா்: ஆம்பூா் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
துத்திப்பட்டு கிராமத்தில் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக உமா் ஆபாத் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று சோதனை நடத்தியதில் அதே பகுதியைச் சோ்ந்த ஆனந்தன் (34) மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
அவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 8 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.