ஆம்பூா்: ஆம்பூா் அருகே கள்ளச் சாராயம் விற்பனை செய்த நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே நாயக்கனேரி மலைக் கிராமத்தில் பல்வேறு இடங்களில் கள்ளச் சாராயம் விற்கப்படுவதாக ஆம்பூா் கிராமியக் காவல் நிலைய போலீஸாருக்கு புகாா் சென்றது. அதன் அடிப்படையில் போலீஸாா் சோதனை நடத்தினா்.
அப்போது, நாயக்கனேரி கிராமத்தைச் சோ்ந்த முருகன் (42) கள்ளச் சாராயம் விற்பனை செய்வது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, 60 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா்.