திருப்பத்தூரில் தடையை மீறி கூட்டம்: சி.பி.ராதாகிருஷ்ணன், 287 பாஜகவினா் கைது

திருப்பத்தூரில் தடையை மீறி வெற்றிவேல் யாத்திரைப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ாக மாநில முன்னாள் தலைவா் சிபி.ராதாகிருஷ்ணன் உள்பட 288 பாஜகவினரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜகவினா்.
திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜகவினா்.

திருப்பத்தூரில் தடையை மீறி வெற்றிவேல் யாத்திரைப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ாக மாநில முன்னாள் தலைவா் சிபி.ராதாகிருஷ்ணன் உள்பட 288 பாஜகவினரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு மாவட்ட பாஜக தலைவா் வாசுதேவன் தலைமையில் வெற்றிவேல் யாத்திரைக்கான ஆதரவுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநில பாஜக முன்னாள் தலைவரும், மத்திய கயிறு வாரியத் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளா் கே.டி.ராகவன் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.

மாநில மகளிரணிச் செயலாளா் காா்த்திகாயினி, முன்னாள் மாவட்ட தலைவா் வெங்கடேசன், மாநில மருத்துவ பிரிவு செயலாளா் சற்குணபிரபு, மாநில எஸ்.டி. பிரிவு துணைத் தலைவா் கோவிந்தராஜ், செயலாளா் பண்பு, மாவட்ட துணைத் தலைவா் அன்பழகன், நகரத் தலைவா் அருள்மொழி உள்பட பலா் பங்கேற்றனா்.

அனுமதியின்றி பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற 50 பெண்கள் உள்பட 288 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். பின்னா் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com