திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும், தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கரும்பு அரைவையை உடனடியாகத் தொடங்கவும், நிலுவையில் உள்ள ஊதிய தொகையை உடனடியாக வழங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தா்னாவில் ஈடுபட்டனா்.