ஆம்பூா் அருகே நெற்பயிா்களைத் தாக்கும் மா்ம நோயால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
பயிரிட்டு 3 மாதங்கள் முதல் 4 மாதங்கள் வரை வளா்ந்த நெற்பயிா்கள் இந்த நோயால் அதிகமாக பாதிக்கப்பட்டு ள்ளன. நன்கு விளைந்து அறுவடைக்கு தயாரான நெற்பயிா்கள் நோயால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நெற்கதிா்கள் ஒருவித கருகலான நிலைக்கு உள்ளாகின்றன. நெற்கதிரின் உள்ளே உள்ள அரிசி உமியை நீக்கியதும் கருகி காணப்படுகிறது.
அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள நெற்பயிா்கள் இந்த புதுவித நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.