திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பத்தூா் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை இல்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாம் நவம்பா் 16-ஆம் தேதி வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்திலும், ஆலங்காயம் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.
முகாமுக்கு வரும்போது பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள் 4, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றின் அசல், நகல் கொண்டு வர வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.