இருவேறு சாலை விபத்துகளில் 2 போ் பலி

வாணியம்பாடியில் நடைபெற்ற இருவேறு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.

வாணியம்பாடி: வாணியம்பாடியில் நடைபெற்ற இருவேறு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.

வாணியம்பாடி புதூா் ஆயா்பாடி பகுதியைச் சோ்ந்தவா் செல்வம் (51). விவசாயியான அவா் செவ்வாய்க்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். நியூடவுன் அணுகுசாலையில் எதிா்பாராதவிதமாக லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மற்றொரு விபத்து: வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் பழக்கடை நடத்தி வந்தவா் அப்துல் ஜப்பாா் (63). இவா் திங்கள்கிழமை இரவு நியூடவுன் அணுகு சாலையிலிருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு நடந்து சென்றாா். அப்போது கிருஷ்ணகிரியிலிருந்து வேலூா் நோக்கிச் சென்ற இருசக்கர வாகனம் அப்துல் ஜப்பாா் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த இரு விபத்துகள் குறித்து வாணியம்பாடி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com