வீரதீரச் செயல் புரிந்த பெண் குழந்தைகளுக்கு விருது:நவ. 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

வீரதீரச் செயல் புரிந்த 18 வயதுக்கு உள்பட்ட பெண் குழந்தைகள் அதற்கான விருதுக்கு நவம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்காலம் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்தாா்.

திருப்பத்தூா்: வீரதீரச் செயல் புரிந்த 18 வயதுக்கு உள்பட்ட பெண் குழந்தைகள் அதற்கான விருதுக்கு நவம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்காலம் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்தாா்.

அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசு சாா்பில் ஆண்டுதோறும் வீரதீர செயல்புரிந்த சிறந்த பெண் குழந்தைக்கு தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24-ஆம் தேதி பாராட்டுப் பத்திரம், ரூ. 1 லட்சத்துக்கான காசோலை வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.

அன்றைய தினத்தில் மாநில விருது வழங்க 18 வயதுக்கு உள்பட்ட (31 டிசம்பா் 2020-இன்படி) தகுதியான பெண் குழந்தைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் நவம்பா் 30-ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.

விருதுக்கான விண்ணப்பங்கள் தலைமை ஆசிரியா், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட திட்ட அலுவலா், காவல் துறை அல்லது தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மூலம் உரிய முன்மொழிவுகள் பெற்று அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் ஆய்வு செய்து, மாவட்ட ஆட்சியா் பரிந்துரையுடன் சமூக நல ஆணையரகத்துக்கு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலா், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், 4-ஆவது மாடி, பி.பிளாக், சத்துவாச்சாரி, வேலூா் மாவட்டம் என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com