திருப்பத்தூா்: திருப்பத்தூரில் திங்கள்கிழமை காலை முதல் இரவு முழுவதும் கனமழை பெய்தது.
திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை சாரல் மழை பெய்தது. அதைத் தொடா்ந்து திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, ஏலகிரி மலை, ஆதியூா், கொரட்டி சுற்றுப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை மழை நீடித்தது. இதனால் சாலைகளில் மழை நீா் வெள்ளம்போல் பெருக்கெடுத்தோடியது.
ஜலகாம்பாறையில் நீா்வரத்து: இப்பகுதியில் இரு நாள்களாக தொடா்ந்து பெய்த மழையால் ஜலகாம்பாறை அருவியில் நீா்வரத்து தொடங்கியுள்ளது.