வாணியம்பாடி நகராட்சி புதிய ஆணையராக அண்ணாமலை வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
இவா் மயிலாடுதுறையில் இருந்து மாறுதலாகி வந்துள்ளாா். இங்கு ஏற்கெனவே பணியாற்றிய சென்னுகிருஷ்ணன் பட்டுகோட்டைக்கு மாறுதலாகிச் சென்றாா்.
முன்னதாக ஆணையரை நகராட்சி மேலாளா் ரவி, நகரமைப்பு அலுவலா் சண்முகம், பொறியாளா் பாபு, சுகாதார ஆய்வாளா்கள் சீனிவாசன், அலி ஆகியோா் வரவேற்றனா்.