ஆம்பூா் நகராட்சி சாா்பில் வாக்காளா் சோ்த்தல், 100 சதவீத வாக்குப் பதிவுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் பேருந்து நிலைய வளாகத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சியை திருப்பத்தூா் மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ. தங்கையா பாண்டியன் தொடக்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் த. செளந்தரராஜன் தலைமையில் நகராட்சி பணியாளா்கள் விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தி நின்றனா். மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் சதீஷ்குமாா், ஆம்பூா் வட்டாட்சியா் சி.பத்மநாபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.